வலிமை பார்த்தேன். அதிர்ந்தேன்.
சர்வதேச தரம்! தமிழகம் இன்னும் விவாதிக்காத விஷயம்! பெருந்திரையில் பார்த்தே ஆக வேண்டிய படம்.
கதை, இயக்கம், கேமரா, ஸ்டண்ட் காட்சிகள், கலை என அத்தனையிலும் மிரட்டி இருக்கிறார்கள்.
அடுத்த தலைமுறை(க்கான) படம். Congratulations
#Ajith
#HVinoth
& team.
My Father Sri Sri Raghunathacharya @ Ramsinghasan Pandey, yesterday on the day of Vaikunda Ekadasi, Monday, 02.01.2023 at 9:45 PM reached the Lotus feet of Acharyan. His last rituals are scheduled to take place in Chennai on Tuesday.
- Adiyen R Rangaraj Pandey
13ஆவது ஆண்டாக நடந்த
#edision_awards
இல், 2019ஆம் ஆண்டின் Best villain - Critics Award #நேர்கொண்டபார்வை படத்துக்காக வழங்கப்பட்டது. 2020இல் வாங்கிய முதல் விருது. திரைத்துறையில் முதல் விருதும் கூட. எல்லா புகழும்
#HVinoth
மற்றும்
#Ajith
க்கே... இன்னும் உழைப்பேன் 👍🙏
96 படம் பார்த்தேன்...
அப்படியே
மலரும் நினைவுகளில் பின்னோக்கி சென்றேன்...
பத்தாம் வகுப்பில்
என்னோடு படித்த அந்த முகங்கள்...
அட சே!
நான் படிச்சது
பாய்ஸ் ஸ்கூல்...!
ஆம். #நேர்கொண்டபார்வை படத்தில் நடித்ததற்காக 2வது விருது. தலைசிறந்த PROக்களின் V4 நிறுவனம் வழங்கியது.
#sensational_debut
விருதை திரு
@rparthiepan
, திரு சேரன் கைகளில் பெற்றது பெருமகிழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கு. எல்லா நன்றியும்
#HVinoth
மற்றும்
#Ajith
க்கு.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் British Airways விமானத்தில் தமிழில் அறிவிக்கிறார்கள். தமிழகத்துக்குள் மட்டுமே பறக்கும் விமானங்களில் தமிழைத் தவிர அத்தனையும் பேசுகிறார்கள்
@CMOTamilNadu
@mkstalin
@IndiGo6E
@flyspicejet
சுபாஷ் சந்திரபோஸ் அவரது பெயர். நேதாஜி அவருக்கு வழங்கப்பட்ட பட்டம். நேதா என்றால் தலைவன் என்று பொருள். நேதாஜி என்றால் தலைவர் என்று அர்த்தம். பட்டத்தால் அல்லாமல் தகுதியால் தலைமையையே தன் பெயராக கொண்டவன். வீரத்தின் விளைநிலம்.
பார்களை மூடினால், சாலை விபத்துகள் பாதியாக குறையும். விபத்துகள் குறைந்தால், உயிர்பலி பாதியாக குறையும். ஆனால் இது நடக்காது.... ஏனென்றால், பார் நடத்தும் அரசியல்வாதிகள் வருமானம் பாதியாக குறையும்!
கோடிக்கணக்கான ஆண்டுகள் உருவான இந்த மண்ணின் கதை... கடவுளே மனிதன்; மனிதனே கடவுள் எனும் தத்வமஸி நிலை... தமிழ் அவதார்... இசை, நடிப்பு, திரைக்கதை என ஒவ்வொன்றிலும் பின்னி பெடல் எடுத்திருக்கும் #காந்தாரா பார்த்தேன், சிலிர்த்தேன்... அடேயப்பா... அற்புதம்... 1/2
உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் (மட்டும்) மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே.
#சத்யமேவஜெயதே
#வாய்மையேவெல்லும்
இந்தியாவில் *ஒவ்வொரு நாளும்* 410 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் *1.5 லட்சம் பேர் பலி.* அதேசமயம், இதுவரை ஒருவர் கூட
#Corona
தாக்கி இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் 24 மணி நேரமும் அதையே பேசுகிறோம். Are we going in right direction?
@narendramodi
@CMOTamilNadu
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள் முதல் எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். நல்லவர்கள் ஜெயிக்கட்டும். நல்லவைக்கு முக்கியத்துவம் கிடைக்கட்டும். நாட்டுக்கு நிறைய நல்லது நடக்கட்டும். பொங்கலோ பொங்கல்...!
40 ஆண்டுக்குப் பிறகு வந்த மாமணி... 500 ஆண்டுக்கு முன் நீர் தொட்ட நிமலன்... 1500 ஆண��டுகளுக்கும் மேல் அருள்பாலிக்கும் அத்தி வரதன்... மீண்டும் அனந்த சரஸ் குளம் ஏகுவதா...? கண்கள் குளமாகிறது... நான் உன்னை பார்த்துவிட்டேன்... நாடு பார்க்க வேண்டாமா...? வரதா... வரம் தா...!
@CMOTamilNadu
அரசியல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு நகை முரண் உதாரணம், இவர்கள் #வெற்றிவேல்_வீரவேல் என தமிழில் # போட்டதும்; அவர்கள்
#JaiPeriyar_Tamilnadu
என ஜெய கோஷம் போட்டதும்! 🙂
அடடா எப்பேர்ப்பட்ட நேர்மறையான மனிதர்... இனி நாடக உலகம் சோகமாகும்... சொர்க்க லோகம் சந்தோசமாகும்... We miss you Crazy Mohan, sir... தமிழர்களின் சிரிப்பில் உங்களைக் காண்போம்...
வாய்ப்பு கிடைத்தால்
#WillSmith
நடித்த the PURSUIT of HAPPYNESS படம் பாருங்கள்... அடுத்தவர் மீது பழி போடாமல், விதியை நோகாமல், குறுக்கு வழியில் செல்லாமல், கடுமையாக உழைத்தே முன்னேற முடியும் என்பதற்கான நிஜ உதாரணத்தின் கதை.
#lockdown
வீரத்தின் அடையாளம் எம் காளைகளும், படை வீரர்களும்... விவேகத்தின் அடையாளம் எம் தெய்வப்புலவர்...
இனிய மாட்டுப் பொங்கல், ராணுவ தினம், திருவள்ளுவர் தினம் வாழ்த்துக்கள்...
நன்றி மறவோம்!
Hacking நடந்த 24 மணி நேரத்தில் திரும்ப வந்துவிட்டோம். இறைவன் கருணை, உங்களின் அன்பு இதை சாத்தியமாக்கியது. இன்னும் பொலிவோடு, இன்னும் வேகமாக, இன்னும் உண்மையாக உழைப்போம். 🙏
ஆட்டோ ஓட்டுநர் முதல் அம்பானி வரை அனைவரும் கொண்டாடும் திருவிழா... செய்யும் தொழிலே தெய்வம் என சொல்லிக் கொடுத்த பெருவிழா... அனைவருக்கும் இனிய
#Vijayadashami
#SaraswathiPooja
நல்வாழ்த்துக்கள். எங்கள் அன்னையின் திருவருளால் நற்தொழில் அனைத்தும் நெடிது வளர்க
👍🙏🇮🇳💯💐
மெல்ல விழுகிறது
பனி
மெதுவாய் கிறங்குகிறது
விழி
இதோ
இன்று இரவும்
உறங்கப் போகிறேன்
நிம்மதியாய் ....
என்
சுடலைமாடன்
உறங்காவில்லி
எல்லைச்சாமி
விழித்திருக்கும்
நம்பிக்கையில்...!
URI (The surgical strike) படம் பாருங்கள்... என் தேசத்துக்காக ராணுவம் செய்யும் தியாகம் புரியும்...!
திரும்பிய இடமெல்லாம் தண்ணீர். இன்னும் ஒரு வாரம் இதே நிலை தான் என்கிறார்கள். தேங்கியிருக்கும் மழைநீர், உட்கட்டமைப்பு ஓட்டை வழியே பாய்கிறது. இருந்தவர்கள் இருப்பவர்கள் இருவருமே பொறுப்பு. தண்ணீரை வெளியேற்றும் வழி அறிந்திருந்தால், மக்களை வெளியேற்றும் நிலை வந்திருக்காது.
#ChennaiRains
When my friend asked a seat for her daughter in a famous Chennai college, they asked his religion. Then asked their interest to convert. At least one? - they shown their charity. At least in future? - then came the Magnanimity.
When he firmly refused, the plea was also rejected.
ஒளி என்பது நம்பிக்கை. தீப ஒளி என்பது நன்னம்பிக்கை. நிறைய நல்லது நடக்கட்டும். திக்கெட்டும் வெளிச்சம் பரவட்டும். இந்தியா இன்னும் ஒளிரட்டும்; தமிழகம் மேலும் மிளிரட்டும். 👍🎉🙏
#HappyDiwali
#Diwali
சிறிய தவறுகளுக்கு கொடிய தண்டனை என்பது, காட்டில் இருக்கும் சாதுக்களையே கொதித்து எழச் செய்துவிடும். நாட்டு மக்களின் கோபம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
- சாணக்யர், தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம்.
எந்த விதமான சிலை அவமதிப்புகளும் ஏற்கத்தக்கவை அல்ல. அவை சிலை அல்ல; அடையாளங்கள், நம்பிக்கைகள். தவறுகள் தான் தண்டிக்கப்பட வேண்டும் தவிர, தத்துவங்கள் அல்ல! அதுவும், சட்டப்படி மட்டுமே!
#PeriyarStatue
@DrSenthil_MDRD
&
@annamalai_k
சம்மதித்தால் நான் நெறியாளுகை செய்யத் தயாராக இருக்கிறேன்.
@ChanakyaaTv
ஏற்பாடும் பதிவும் செய்து தரும். No copyright claims 🙂. அத்தனை ஊடகங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். Any day, Any time, Any where, In Person, Online, Live or Recorded... All fine🙏.
இன்னிக்கு தேதிக்கு அநியாயம் தான் ஜெயிக்கும்.
அது
ஜெயிச்ச பிறகு தான்
நியாயம் எதுன்னே தெரியும்.
அதுக்காக நியாயத்தை சொல்லாம விட்டுடக் கூடாது...
அப்புறம் - ஜெயிக்கிறது எதுவோ அதுவே நியாயம்னு மாறிடும்...!