விஜய் அவர்களின் தைரியம் மிகவும் பாராட்டத்தக்கது. தனது பாதை சினிமா தான் என சிறுவயதிலேயே முடிவெடுத்து, அதை நோக்கி நகர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருக்கும் போது, அதைத் துறந்து, பல ஆண்டுகள் தயாரிப்போடு அரசியல் களம் காண்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…
நாங்கள் திருமணமான புதிதில் சென்னையில் வசித்து வந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு பணிகள் செய்ய உதவியாக வந்தவர் குப்பம்மா. அப்போது அவர் மூன்று வீடுகளில் வேலை செய்து வந்தார். ரொம்ப கரெக்டாக இருப்பார் என்று அவரை சிபாரிசு செய்தவர் சொன்னார். அது போலவே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக…
இளமைக்காலத்தில் உழைத்த உழைப்புகள் பயன்தராமல், பேசப்படாமல் இருந்து, பிற்காலத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது அதை அனுபவிக்க முடியாமல் போவது பெரும் கொடுமை. ஆழ்ந்த இரங்கல்கள்.
#Kapildev
கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டிற்குள் ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில், அதுவும் அதுவரை இந்திய கிரிக்கெட் அணி கண்டிராத ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில் இந்திய அணி நம் பழைய குடும்ப அமைப்பை ஒத்திருந்தது. பேட்ஸ்மென்கள் கணவர்களைப் போல. வேலைக்குப் போய் வருவது…
உதயநிதியால தமிழகம் முழுக்க பிரச்சாரம்.போக முடிந்தது.மக்களை கேட்க வைக்க முடிந்தது. ஒ பி எஸ் பையன் எம் பி யா இருந்தும் அடுத்த தொகுதிக்கு கூட பிரச்சாரம் பண்ண போக முடியலை. மக்கள் உதயநிதிய ஏத்துக்கிட்டாங்க.
நிறைய வெளிநாட்டு வீரர்கள், இந்தியான உடனே டம்மியா இருக்கும்னு நினைச்சு வந்திருப்பாங்க போல. இது இந்தியா இல்ல ஸ்காண்டிநேவியன் நாடுகளுக்கு இணையான மாநிலம்னு ஆச்சரியப்படும்படி அட்டகாச ஏற்பாடுகள். இதற்கு உறுதுணையாக இருக்கும் தமிழக அரசு அதிகாரிகளை பாராட்ட வேண்டும். அத்தனை பேரையும்
இயக்குநர் பாசில் மலையாளத்தில் ஒரு படம் எடுப்பார். அது ஹிட்டான உடன் தமிழுக்கு அந்தப் படம் செட் ஆகுமா என யோசித்து, அதற்கேற்ற நடிகர்களை வைத்து இங்கே மீண்டும் எடுப்பார். பூவே பூச்சூட வா, பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் 16 என. அது போல மலையாளத்தில் அவர்…
ட்விட்டர்ல இருக்கிறவங்க ஆன்லைன்ல நேரடியாவே முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புங்க. புரோக்கர்களை நம்ப வேண்டாம். இவரோட Past history ரொம்ப மோசம். நிறையப் பேர் சொல்லி இருக்காங்க.
ராஜ ராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் சிறந்த ஆட்சியாளர் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. அக்பரை விட ஜஹாங்கீர் சிறந்த ஆட்சியாளர் என்பதும். வரலாற்றில் தமிழ்நாடு முதல்வர்
@mkstalin
மு க ஸ்டாலினும் அப்படி இடம் பிடிப்பார். அதற்கு கட்டியம் கூறி இருக்கிறது இன்றைய தமிழ்நாடு பட்ஜெட்.
முதலமைச்சரின் மானிய விலையில் மாடித்தோட்ட வளர்ப்ப்பு கிட் வந்து சேர்ந்தது. தென்னை நார் கழிவு கேக் -6 (தலா 2 கிலோ எடை), 6 grow bags, 6 வகை காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், டிரைகோடெர்மாவிரிடி, பாஸ்போ பேக்டீரியா, வேப்பெண்ணெய் மருந்து என சுமார் ₹900 மதிப்புள்ள பொருட்கள் ₹225க்கு
வெறும் நாலு ஜோக்கை வச்சுக்கிட்டு எஸ் வி சேகர், ஒய் ஜி மகேந்திரன்லாம் காமெடியன்னு ஏமாத்திக்கிட்டு இருந்த மாதிரி தான் பிராமணர்களும் அறிவாளின்னு ஏமாத்திக்கிட்டு இருந்தாங்க. சுருளி, கவுண்டமணி,வடிவேல், சந்தானம், யோகி பாபுன்னு ஒரிஜினல் திறமைகள் வந்த பின்னர் இவங்கள யாரும் சீந்தாத மாதிரி
பதவியேற்று ஒன்றரை ஆண்டுக்கு உள்ளேயே தமிழ்நாடு உயர்கல்வியை இந்தியா முழுக்க பேசு பொருளாக்கி விட்டார் முதல்வர் ஸ்டாலின். வெளி மாநில HR கள் இந்த ஏழாவது செமஸ்டர் நாளைய திறன் implementationஐ லிங்கிட் இன்னில் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஒரு மாநில முதல்வர் எப்படி இந்த அளவு சிந்தித்து
மனைவியை கண் கலங்காம வச்சுக்கிறது தான் ஆணுக்கு அழகுன்னு அவன் மேலயே பிரஷர் ஏத்துறாங்க. ஏன் கணவனை கண் கலங்காம பார்த்துக்கங்கன்னு பெண்கள் கிட்ட யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க.
பல வருடங்கள் முன்பு, நான் கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரசித்த பெற்ற ஒரு பம்ப் கம்பெனியின் சென்னைக் கிளையில் சர்வீஸ் எஞ்சினியராக நட்டையும் போல்ட்டையும் ராவிக் கொண்டிருந்��ேன். சர்வீஸ் சம்பந்தமான ஒரு தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறையை கோவை தலைமை நடத்தியபோது, என் சீனியரும் நானும்…
நம்ம கூடவே இருக்கிறதால நமக்கு அருமை தெரியுறதில்ல. இளையராஜா, ரஹ்மான், மணிரத்னம், கமல், வைரமுத்து, பி சி ஸ்ரீராம்னு நம்ம கிட்ட இருக்கிற மொத்த கிரியேட்டிவ் ஸ்ட்ரெந்த் மற்ற ஸ்டேட்களில் இல்லை.
பி டி ஆர் குடும்பம் கோவில்களுக்கு செய்தது பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு ஏராளமான நிலங்களை கொடுத்தது அவர்கள் தான். அதனால் பி டி ராசன் அவர்கள் சிலை அங்கே வைக்கப்பட்டுள்ளது.
காசியில் அஸ்தி கரைக்க இந்தி தேவையில்லை. பணம் தான் தேவை. அந்த பணம் சம்பாதிக்க ஆங்கிலம் தேவை. ராமேஸ்வரத்தில் அஸ்தி கரைக்க வரும் வட மாநிலத்தவர்கள் என்ன தேவாரம் திருவாசகம் பாடிக்கொண்டா வருகிறார்கள் ...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன்.
கமல், ரஜினி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போதே எண்பதுகளின் மத்தியில் அவர்களை கலங்கடித்தவர். 2005ல் கட்சி ஆரம்பிக்கும் வரை மினிமம் கேரண்டி ஹீரோவாகவே இருந்தவர்.
1986 ஆம் ஆண்டு. ஒன்று போதும்.அவரின் திரை செல்வாக்கை காட்ட.
கரிமேடு…
தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச்…
சிம்பு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த காலம் என்றால் அது விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் வானம் படங்கள் வெளிவந்த காலம் தான்.
அதிலும் குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா. திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரில் பார்த்தேன். அப்போது ஏசி இல்லை என நினைக்கிறேன். கடுமையான மார்ச் மாத…
Director Kamalhaasan
25 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகம் படத்தின் வெள்ளோட்ட காட்சித் தொகுப்பு ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. முடிந்தபின்னர் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அந்தப் படத்தின் இயக்குநர் கமல்ஹாசனுடன் உரையாடினார்கள். அப்போது குங்குமம்…
உடல் வலிக்கு வாலினி உபயோகப்படுத்துபவர்கள் generic medicine ஆன இதை உபயோகப்படுத்தலாம். ₹22 தான். வாலினி இதே எடையின் விலை 130 க்கு மேல் இருக்கும். ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகத்தில் இது கிடைக்கிறது. ஓரளவு generic medicine கள் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.
#German_Technology
இருபது ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்பத் தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம்
“ஏன்…
#Padayappa
படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே…
அண்ணாமலை இன்று மோடியின் கால் நகத்தில் உள்ள அழுக்கிற்கு கூட உதயநிதி ஈடாக மாட்டார் என்று பேசியிருக்கிறார்.
எதில் எல்லாம் மோடிக்கு உதயநிதி இணையாக மாட்டார் தெரியுமா?
2002 கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொன்று குவித்து. மரண வியாபாரி என்று பெயர்…
கமல்ஹாசனின் தந்தை பரமக்குடி சீனிவாசன் அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. அவருடைய இஸ்லாமிய நண்பர், சக சுதந்திரப் போராட்ட தியாகி ஹாசன் அவர்கள் நினைவாக தன் பிள்ளைகளின் பின்னால் ஹாசன் என்ற பின்னொட்டை சேர்த்தார்.
#Sowcarpet
எந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம்? எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால், எந்த கோச்சிங்கில் சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தமிழ்நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் நேனோ அளவுகூட கவலைப்படாத ஒரு…
இட்லிக்கு சாம்பார் தான் பெஸ்ட் காம்போன்னு சில ஊடகங்கள் திட்டமிட்டே பொய் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைக்கின்றன. இட்லி+எலும்புக்குழம்பு அதை விட பல மடங்கு சிறப்பு. ஈரல் குழம்பு Greatest of all time. இந்தப் பிரச்சாரத்த நாம தான் தொடர்ந்து முன்னெடுக்கனும்.
Now. Beast. குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க. இப்படி ஒரு சப்போர்ட் இருக்கும் போது, விஜய் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி படமாத்தான் பண்ணிக்கிட்டு இருக்கனும். நாயகன்-மனிதன் டைமில் விகடனில் வந்த சினிமா அலசல் கட்டுரை ஞாபகம் வருகிறது. ரஜினி படம் என்பது பழக்கமான ஹோட்டலில் கிடைக்கும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
1.சென்ற ஆண்டை விட அதிகம் சம்பாதிக்க முயலுங்கள்.
2.சென்ற ஆண்டு செலவை பரிசீலனை செய்து முடிந்தால் குறையுங்கள்.
3.புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
4.உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
5.தேர்ந்தெடுத்து படித்து மனதை விசாலமாக்குங்கள்.
இன்னும் கலைஞர் அவர்கள் ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தார் என்று உளறிக் கொண்டே இருப்பவர்களைக் கண்டால் சிரிப்பு வருகிறது. தமிழ்நாட்டில் டி வி எஸ் போன்ற பெரு முதலாளிகளிடம் மட்டும் இருந்த பேருந்துகளை பல எதிர்ப்புகளையும் மீறி அரசுடமையாக்கியவர் கலைஞர். அவர்கள் லாபமில்லா ரூட்களில்
ஒரு நாடாளுமன்ற உறுப��பினராக
@DrSenthil_MDRD
அவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணி என்பது தன் தொகுதிக்கான நலத்தை, தன் மாநில உரிமைகளை நாடாளுமன்றத்தில் கேட்டுப் பெறுவது. அதைச் சிறப்பாகவே செய்தார்.
இங்கேயும் பலருக்கு கேள்விப்பட்ட உடன் உடனடியாக ஏராளமான…
உதயநிதிக்கு பொது மக்களோட எளிதா கனெக்ட் ஆகிக்கிற ஒரு ஆட்டிட்யூட் இருக்கு, பேச்சு இருக்கு, தமிழ்நாட்டுக்கு அத்தியாவசியமான கொள்கைகளில் ஒரு தெளிவு இருக்கு. Cool head இருக்கு. அது திமுகவை இன்னும் பல்லாண்டுகளுக்கு மக்களிடம் நிக்க வைக்கும். அது எதிரிகளுக்கு ஒரு பதட்டத்தை தரும்.
அமீர் அவர்களின் பண்பு எத்தகையது என்பதற்கு எனக்கு நேரடி அனுபவமே உண்டு. அவரது தாயார் இறந்த போது, அவர் மெக்காவில் இருந்தார். உடனடியாக திரும்பி வந்தார். அப்போது அவரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக அவருக்கு நெருக்கமான என் நண்பர்களுடன் நானும் சென்றிருந்தேன். அந்த ஹாலில் இருந்த…
கடந்த பத்தாண்டுகளில் எனக்கு சிக்கல் இல்லாமல் ரிலீஸான ஒரே படம் விக்ரம் தான். அதற்கு காரணம் உதயநிதி
@Udhaystalin
அவர்கள் தான். அவரைப் போல நேர்மையாக, transparent ஆக விநியோகம் செய்தால் தமிழ் திரையுலகம் செழிக்கும். இந்தி திரையுலகை விஞ்சும். நீங்கள் நடியுங்கள், தயாரியுங்கள், அரசியல்
இந்த ஆண்டு கவுண்டமணிக்கு 80 வயது ஆகப்போகிறது. இளையராஜாக்கு 75 ஆம் ஆண்டு விழா எடுத்தது போல
@VishalKOfficial
கவுண்டமணிக்கு விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஒரு ஆணவக் கொலை செய்யும் பெரியவர் வருவார். அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் போது, ஜாதியை காப்பாற்ற செய்வது, பணம் எல்லாம் வேண்டாம் என்பார்.
நிகழ்காலத்தில் இதுபோல சில பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திமுகவின் மீது…
இந்த ஜெனரேசன் மக்கள் சிலருக்கு தெரிஞ்சிருக்காது. ராஜ்கமல் அலுவலகத்தில் மேனேஜராக பணியாற்றியவர் D N சுப்ரமணியம். அவர் ஓய்வு பெற்ற போது பணிக்கொடையாக, அரசு அலுவலகங்களில் கொடுப்பது போல 10 லட்சம் (15 ஆண்டுகளுக்கு முன்னர்) கொடுத்து அனுப்பி வைத்தவர் கமல்ஹாசன்.
நாற்பது வயதில் நாய்க்குணம் என்பது சென்ற தலைமுறைக்கு வேண்டுமானால் பொருந்தி இருக்கலாம், ஆனால் இந்த தலைமுறையில் பெரும்பாலோனோர்க்கு அது பொருந்துவது இல்லை. நாற்பது வயதில் தான் இப்போதெல்லாம் ஒரு மனிதன் பக்குவப்படுகிறான் அல்லது சூழலால் பக்குவப்படுத்தப் படுகிறான்.
இருபதுகளின் இறுதியில்…
1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படி
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் டிக்கெட் வரிசை எண் போட்டு, விளம்பர சீட்டுகள் போல கொடுக்கலாம். நிறைய கம்பெனிகள் முன் வருவார்கள். போக்குவரத்து கழகத்தின் பொருளாதார இழப்பில் கொஞ்சமாவது கிடைக்கும்.
உதயநிதி அவர்கள் என்ன பேசினார் என்று கூட புரியாமல், இப்படி ஒரு கடிதத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய புரிதல் திறன் எப்படி என்று சந்தேகம் எழுகிறது.
இவர்களை எப்படி ஆளுமை என்று சொல்ல முடியும்?
எப்படி இந்த உயர் பதவிகளை…
கடவுளை நம்புவோர் மகா சிவராத்திரிக்கு குல தெய்வ கோயிலை கும்பிடுங்கப்பா. பொதுவா தமிழ்நாட்டில் அப்படித்தான் நடந்துக்கிட்டு இருக்கு. இங்க போய் காசை விடாதீங்க. குலதெய்வம் கும்பிட்டா உள்ளூர் பொருளாதார சுழற்சி இருக்கும். இங்க அவன் காசை மூட்டையா கட்டி கொண்டு போயிருவான்.
வேட்டையாடு விளையாடு திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள் இந்த யூடியூப் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். Digitally restored version with Full HD and 5.1 audio.
ஒரே நேரத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படங்களை இயக்கியவர், ஒரு தீபாவளிக்கு தன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்று��் ரஜினிகாந்தின் படங்களை ஒன்றாக ரிலீஸ் செய்தவர், குறுகிய காலமே தமிழ் திரையுலகில் இயங்கினாலும் அப்போதிருந்த பெரும்பாலான முக்கிய நடிகர்களை…
இதனால் தான் காலம் காலமாக நாங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வந்தோம். டிவிஎஸ் நிறுவனத்தில் இன்டர்வியூக்கு கூப்பிடும் போதே, பெயரை வைத்து short list செய்வார்கள். பார்த்தசாரதி, ஸ்ரீனிவாசன் போல பெயர் உள்ளவர்கள் தான் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். அங்கே 100% இட ஒதுக்கீடு…
ஒரு SC, ஒரு OBC, ஒரு பிராமணர் - மூணு பேரும் ஒரு தனியார் நிறுவனத்துல அக்கவுண்டன்ட் போஸ்டுக்கு அப்ளை பண்ணினா அந்த முதலாளி பிராமணரைத்தான் வேலைக்கு எடுப்பாராம். ஏன்னா பிராமணாளுக்கு சமூகத்துல அவ்வளவு மரியாதை இருக்குதாம்
இட ஒதுக்கீடு ஏன் வந்ததுன்னு இப்ப புரியுதா?
இத்தனை நாள் அழகிரியை மிகக் கேவலமான பிறவியாக நினைத்து எழுதி பேசிக் கொண்டிருந்த அத்தனை வலதுசாரிகளும் இன்று அவரை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடுவதைப் பார்க்கும் போது தங்களின் அஜெண்டாவிற்காக எதையும் செய்வார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
இந்த பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல சேர்க்கிறதுக்கு இப்பவும் ஹெவி டொனேசன், ஹெவி ரெக்கமண்டேசன் தேவை. அது சென்னை மக்கள் கிட்ட ஒரு பிரெஸ்டிஜ் மேட்டர். ஆனா அதை நடத்துறவங்க கிட்ட, அறிவே இல்லைங்கிறது எவ்வளவு விசேஷம்?
எண்பதுகளில் எங்கள் ஊருக்கு முதன்முறையாக வருபவர்கள் அசந்து போய்விடுவார்கள். ஏதோ, ஒரு ஐரோப்பிய கிராமத்திற்குள் நுழைந்த பீல் அவர்களுக்கு கிடைக்கும். கொடைக்கானலின் அடிவாரத்தில் இருந்ததால் நிலவிய இதமான வானிலை. மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கும் பிளம்ஸ், திராட்சை, கேரட், பீட்ரூட்,…
மகாநதி படம் 94ல் வெளியான போது, உடன் அமைதிப்படை, சேதுபதி ஐபிஎஸ், பிரபுவின் நூறாவது படம் ராஜகுமாரன், பாக்கியராஜின் வீட்டுல விசேஷங்க, ஜென்டில்மேன் குஞ்சுமோனின் தயாரிப்பு என பலத்த விளம்பரங்களுடன் வந்த சிந்து நதி பூ, விசுவின் வாங்க பார்ட்னர் வாங்க என நிறைய வெரைட்டியான படங்கள்.…
எனக்கு ஒரு விஷயம் புரியலை. அதிமுகவ எதிர்த்து ட்விட் போட்டா, அதிமுக கூட்டணி ஆட்கள் கேள்வி கேட்டா அது கரெக்ட். சம்பந்தமில்லாம மையத்து ஆட்கள் சண்டைக்கு வர்றாங்க. என்ன காரணமா இருக்கும்?
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு இப்போது கடுமையான போட்டி. ஒரு முறை அணியில் இடம்பிடித்து விட்டால் போதும், ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகை கிடைக்கும். அவர்களின் சொந்த மாநிலத்தில் ஏராளமான விளம்பர வாய்ப்புகள் கிட்டும். ஏதாவது ஒரு மேட்சில் குறிப்பிடும்படி ஆடிவிட்டால் அரசியல்…
எனை நோக்கி பாயும் தோட்டா, தங்க மகன், தொடரி, பட்டாஸ், மாரி -2, ஜகமே தந்திரம், அத்ரங்கிரே, கொடி, மாறன்னு சில வருசமாவே தனுஷை நம்பி போய் தர்ம அடி வாங்குறது தொடருது...
ரஜினி அரசியலில் வெற்றி பெற்றால், ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பின் எப்படி மன்னார்குடி மாபியா உருவானதோ அது போல மயிலாப்பூர் மாபியா ஒன்று உருவாகும். அதற்காகத்தான் அத்தனை மீடியாவும், புரோக்கர்களும்,பயனடையப் போகிறவர்களும் ஓவர் டைம் பார்க்கிறார்கள்.
#Sivakasi
பல ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் இதழில் மாலன் அவர்கள் எழுதிய “தமிழ்ச்செல்வன் நடத்திய மெஸ்” சிறுகதை இன்னும் என் மனதில் இருந்து அழியாத ஒன்று. அதில் அரசை எதிர்க்கும் கம்யூனிச சிந்தனை உள்ள ஒருவன் தான் கதை நாயகன். அவனது காதலி, எப்போதும் அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டே…
சென்ற மாதம் வட மாநிலங்களில் இருந்து வந்த பேராசிரியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு. சில கல்லூரிகளுக்கு மதிப்பீட்டுக் குழுவுடன் செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆவணங்களை பரிசோதிக்கும் போது, எல்லோரும் அடையும் அதிர்ச்சி நமது தமிழ்நாட்டின் ரிசர்வேஷன் பாலிசி. அவர்கள் இன்னும் ஓபிசி
மன்னர் ஆட்சி முறை தான் பாஜக பின்பற்றுது. அதில் தான் மக்களுக்கு ஏராள வரி விதிக்கப்படும். குலம் பார்த்து கல்வி கிடைக்கும், மன்னரின் உறவு, நட்புக்களுக்கு எந்த விதியுமின்றி செல்வம் குவியும். அண்டை நாட்டுடன் வரும் போர் பற்றி பேசியே மக்களிடம் உழைப்புச் சுரண்டல் நடக்கும்.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் வீட்டில் இருக்கும் பீரோவில் எம்ஜிஆர் படம் ஓட்டப்பட்டிருக்கிறது.
இன்று வரை இப்படி ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள், நல்லவர்களாக காட்டப்படுகிறவர்கள் வீட்டில் எல்லாம் எம்ஜிஆர் படம் வைத்து அப்போதுதான் இன் டைரக்ட் மார்க்கெட்டிங் செய்தார்கள். இப்போது உள்ள…
இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரரும், கமல்ஹாசனின் உற்ற நண்பருமான நடிகர், உதவி இயக்குனர் திரு
@rsshivaji
அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அவர் ஆன்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா, கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.